Thursday, March 8, 2012

வள்ளலார் என்ன தவம் செய்தார்?





வள்ளலார் என்ன தவம் செய்தார் நமக்கு என்ன தவத்தை அருளினார்?

-அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி-

Facebook இல் நடந்த  விவாதம்  .. அதில் வந்த கருத்துக்கள்  சில  இங்கே ..

வள்ளல் பெருமான் பாடலில் இருந்து சான்று.

என் கண் மணியுள் இருக்கும் தலைவ
நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் - மெய்யருள்வியப்பு(வள்ளலார் )

நினைந்து நினைந்துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே
நிறைந்து நிறைந்தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு  
நனைந்துநனைந் தருளமுதே ----- ஞான சரியை

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் - அம்மை திருப்பதிகம்"(வள்ளலார் )

திருச்சிற்றம் பலத்தின்பத் திரு உருக் கொண்டருளாம் திருநடஞ்
செய்தருளுகின்ற திருவடிகள் இரண்டும் ... திருவடிப் பெருமை

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் -
நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும்
பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.-பட்டினத்தார்

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து - சுத்த சிவநிலை(வள்ளலார் )


கண் என்பதற்கு வள்ளலார் தவிர மற்றவர் சொன்னது
1) கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - சிவவாக்கியர்
2) என் கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் - மெய்யருள் வியப்பு(வள்ளலார் )

3) எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !(பாரதியார்)
4) கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் - கந்த குரு கவசம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல கேள்வி. நாம் திருவருட்பா, அகவல், திருமந்திரம், திருவாசகம், போகர் சப்தகாண்டம், சிவவாக்கியர் பாடல், மற்றும் எண்ணிறைந்த சித்தர்கள் பாடல்களை படித்தீர்களானால் வள்ளலார் மட்டும் அல்ல எல்லா மகான்களும்  என்ன தவம் செய்தார்கள் என்று விளங்கும்.

ஆனால் இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கு பக்குவம் இல்லையெனில் நல்லதொரு சற்குருவய் நாடி செல்வது நலம். ஏனென்றால் பள்ளி படிப்பில் இருக்கும் போது என்ன செய்வோம் நமக்கு வரும் சந்தேகத்தை தெரிந்த ஆசிரியரிடம் இருந்து தான் கற்று தெரிந்து கொள்வோம். அது போல தான் சித்தர்களின் பாடல்களும் அதன் விளக்கங்களும்.

இங்கே வாசியோகம் பற்றி ஒருவர் சொல்கிறார். வாசியைப் பற்றி வள்ளலாரும், திருமூலரும், போகரும் என்ன என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் மூச்சை பிடிக்கவேண்டும் என்பது அல்ல.

நாம் சிந்திக்க வேண்டும் சிந்தித்து பொருள் காண வேண்டும். விவாதத்தினால் மெய்ப்பொருளை காண முடியாது.  அனுபவத்தில் மட்டுமே முடியும்.

நம்மவர்கள் தான் அறியாமையால் நாத்திகவாதம் பேசுகிறார்கள் மூடநம்பிக்கை என்று சாடுகிறார்கள். உனக்கு புரியவில்லை என்றால் இல்லை என்றாகிவிடுமா? உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய்! நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணரிடம் கேட்டார்.  அவர் உணரச் செய்தார்! நரேந்திரன் சுவாமி விவேகானந்தரானார். ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரானார்!

கேள்விகேள் - கேட்க வேண்டியதுதான். தகுந்தவரிடம் கேள். புரியவில்லையா, உன்னிடமே நீ கேள்! சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று! இதைத்தான் வள்ளலாரும் பாடினார்.
தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என வெண்ணிலாவிடம் கேட்கிறார். சூரியனிடம் கேட்கவில்லை. ஆன்மீகவாதிகளே சிந்திக்க வேண்டியம் இடம் இது!?

நரேந்திரன் கேள்விக்கு பதில் தந்தார் நல்ல ஒரு குரு! இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான்!? இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று
இல்லாமலாக்குகின்றனர்
"துறை இது வழி இது நீ செயும் முறை இது என மொழிந்த அருட்பெரும்ஜோதி" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் சுட்டிக்காட்டிய வழி - விழி வழியை நமது ஞானிகள் - சித்தர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதும் இதுவேதான்!

"சூடு கொண்ட திரு ஆடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே" என அகத்தியர் திருவாகிய இறைவன் ஜோதியாக ஆடும் துறைமுகம் எது என அழகாக கூறுகிறார். துறை முகத்தின் கண்ணேயுள! இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார்? எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார்! சற்று சிந்தியுங்கள். சிந்தித்தவனுக்கே சித்திக்கும்!!

எல்லா ஞானிகள் பாடல்களையும் பொருள் கொள்ள வேண்டும். ஞானிகள் பாடல்களை படித்து உணர்வதற்கு பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை. பக்தியும், இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இருந்தாலே போதுமானது. கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவர் தாள் (திருத்தாள் - திருவடி - இருகண்கள்) வணங்கி என மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.'

முதலில் இறைவன் அண்டத்திலுள்ளதைப் போல பிண்டத்திலும் கோயில் கொண்டுள்ளான் என்றும், தலையில் ஐந்து பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்களில் ஒளியாக சீவனாக உள்ளான் என்றும் அறிய வேண்டும். சந்தேகமே இருக்கக்கூடாது. சந்தேக நிவர்த்தியே சுருதி உபதேசம்.

தியானம் செய்வது, ஆரம்பத்தில் ஏதாவது ஒரு உருவத்தை பார்த்து இருந்து செய்யவேண்டும். உருவம் என்றால் தெய்வத் திருஉருவங்களுக்கு போய்விடாதீர்கள். எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜோதியை வைத்துக் கொள்க. ஒருவிளக்கு ஏற்றிவைத்து அதன்முன் அமர்ந்து கண்களை திறந்து அந்த ஜோதியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும். சிலகாலம் அப்படியே இருந்து பழகிப்பழகி வரவர நாம்பார்க்கின்ற ஜோதியில் பலவித மாறுதல்கள் உண்டாகும். ஒரு நிலையில் ஒன்றுமே தெரியாமல் கூடபோகும். உங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டும். அப்போது ஆடாதீர்! அசையாதீர்! வேறொன்றை நாடாதீர்!

அதன்பிறகு உங்களுக்கு பற்பல காட்சிகள் அனுபவங்கள் ஏற்படும். சற்குரு வழிகாட்டுவார். இதுவே ஞானத்தில் சரியை என்ற 13-வது படிநிலையாகும். இவ்வாறு பயிற்சி செய்து அனுபவபட்டால் பின்னர் விளக்கு ஏற்றிவைக்க வேண்டியதுமில்லை. எந்த இடத்திலிருந்தும் கண்களை திறந்து இருந்து தியானம் செய்யலாம்! அதுவே முக்திக்கு வழி.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எப்படி தியானம் செய்தார் என அறிய வேண்டாமா? தன்னுடைய 9 வயதில் தன் வீட்டின் மாடியிலுள்ள ஒரு அறையில் சுவரில் கீழே ஒரு நிலை கண்ணாடியை வைத்து அதன் முன்னர் ஒருவிளக்கை ஏற்றி அதன்முன்னர் இருந்து பார்த்து தியானம் செய்தார். சுவரில் இருக்கும் கண்ணாடியில் தன் உருவமும் தன் கண்ணில் விளக்கின் ஒளியும் கண்டு தியானம் செய்தார்.

சில நாட்களிலே தன் "கண்" ஆடியிலே ஆறுஜோதிகொண்ட ஜோதிதரிசனம் பெற்றார். இதைத்தான், சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் . . . என் கண் உற்றதே என பாடியருளினார். ஞான அனுபவ நிலை! சிந்திப்பவர்க்கே சிவம்! காணலாம் கண்ணிலே! கண்ணாலே காணலாம்! மிகமிக உயர்ந்த ஞான நிலை இதுவே.

இதை அறிந்தவன் பாக்கியவான்! இதை அனுஷ்டித்தவன் புண்ணியவான்! இதை அனுபவித்தவனே ஞானவான்!


போகர் சப்தகாண்டத்தில் இருந்து ஒரு பாடல்:

வார்த்தையால் தாக்கக்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி ஆர்த்தையால் அக்கரத்தை “விழிரெண்டில்வைத்து” அறிவான மனந்தன்னை அதற்குள்மாட்டி தேர்த்தையால் தேசிஎன்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம் பூட்டி மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினை விட்டு மூட்டில்பாரே

சுழி என்றால் = வட்டம் என்று ஒரு பொருள் உண்டு பூஜ்யம் என்றும் சொல்வார்கள். நம் கண் வட்டமாக உள்ளதா அதன் முனை கண்மணி தானே - இதைத்தான் சுழி முனை என்றார்கள்.

"வட்டவிழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக் கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்” – பத்தரகிரியார் [மெய்ஞ்ஞானப் புலம்பல்]

"கண்ணே கண்மணியே கண்ஒளியே கண்ணுட் கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே” – திருவருட்பா 2096

என் இரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி” – திருவருட்பா 550

"கண்ணினால் உனது கழற்புதம் காணும் கருத்தினை மறந்து” – திருவருட்பா 1049

சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை என் மெய்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது” - திருவருட்பா 1278

"கண்ணே அக்கண்ணின்மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே” – திருவருட்பா 1392

"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்
கனலெழுப்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்" - அகத்தியர் . தவ அனுபவத்தில் கண்ணில் கடுப்புத் தோன்றும்

கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி
யாடுமடா ஞானம் முதற்றே" என்கிறார் அகத்தியர்.

கணபதியை - கண்ணான கணபதி என்கிறார். கணபதி எப்படி கண் ஆகும்? கணபதி என்றால் கணங்களுக்கு அதிபதி. நமது கண்ணில் ஐந்து பூதகண அம்சமும் உள்ளதல்லவா? அங்கே ஒளியாக-பதியாகிய இறைவன் உள்ளானல்லவா? நம் கண்ணில் பதி உள்ளதல்லவா? கண்-பதி கணபதி என்றாயிற்று.

ஐந்து பூதகனங்களும் அதன் தலைவனும் கண்ணிலே இருக்கிறான். பதி-எனவேதான் கணபதி என்கின்றனர் -அகத்தியர்.

அதனால் தான் கண்ணான கணபதி என்றார். இந்த கணபதியை வெளியே அரச மரத்தடியில் பார்க்கச் சொல்லவில்லை. கண்ணில் தான் காணச் சொல்கிறார். அதன் மூலம் அமுதம் கிடைக்கப் பெறும் என்றும் ஞானம் என்றும் கூறுகிறார்.


தோணிபோல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் - என்று அகத்தியர் மக்களிடம் ஒருவருக்கும் சொல்லாதீர்கள் நீங்கள் அறிந்து உணருங்கள் என -எல்லோருக்கும் சொல்கிறார். இறைவன் இருக்கும் இடம்-வீடு-நம் உடலில் தோணிபோல் காணும் என்கிறார். நமது கண் தோணிபோல தானே இருக்கிறது? இந்தத் தோணியேதான் இறைவன்-ஜீவன் குடுயிருக்கும் வீடு.

சீர்காழி ஊரில் குடி கொண்டிருக்கும் சிவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் இதனால் தான் வழங்குகிறது. தோணி போன்ற கண்ணிலே இருக்கிறார் சிவம் ஆகிய ஒளி. புரிந்து கொள்க, உணர்த்து கொள்க.

சிந்தித்து தெளிவு பெறுவோம். அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வளமுடன்.

Mathi Vanan - https://www.facebook.com/profile.php?id=100000500197062
----------------------------------------------------------------------------------------------------------------
அருட்பெரும்ஜோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
என்னிதய கமலத்தே இருந்தருளுந்த் தெய்வம்
எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம்
சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம் - திருவருட்பா 3910

இதற்கு பொருள் கூறுங்கள் என் இரண்டு கண்மணிகள் இலங்குகின்ற தெய்வம் என்று சொல்கிறார்.  அப்படி பார்த்தால் கண்ணின் வழியாக தான் தவம் செய்ய வேண்டுமா?

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்று வள்ளுவர் அய்யா சொல்லுகிறார். கண்ணும் நீ மணியும் நீ கண்ணில் ஆடும் பாவை நீ எண்ணும் நீ எழுதும் நீ என்று ஒரு மகான் பாடுகிறார்.

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே


மதிவாணன் அவர்களின் விளக்கம் சற்று சிந்திக்கவே வைத்து விட்டது. நன்றி
மதிவாணன் சொல்வதில் ஏதேனும் உங்களுக்கு சங்கேதம் ஏதும் உள்ளதா? மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். அதே போல் ஏன் இரண்டு மூன்று பேரை தவிர வேறு யாரும் இடுக்கை இட வில்லை ? ஒரு வேலை எல்லோரும் தெரிந்து இருந்தும் பதிவு இடுவதற்கு தயக்கமா? இல்லை ரகசியாமா?

-Surya Chandra


இறைவன் திருவடி நம் கண்கள்

1 comment:

  1. நன்றி ஐயா. இன்றுதான் தங்கள் பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆண்டவருக்கு நன்றி. தங்களுடைய வாட்ஸப் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா. 7871367099 L.Balasubramanian, Rajapalayam

    ReplyDelete